2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு அரசு புதிய விசேட திட்டம்!

உள்ளூர்April 3, 2026 · 4 months முன்2
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு அரசு புதிய விசேட திட்டம்!

கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் மீன்பிடி கொள்கை முன்மொழிவுகளுக்கு அமைய, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கடற்றொழிலாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளின் போது உயிரிழப்பு ஏற்பட்டால், தெரிவு செய்யப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் பின்வரும் இழப்பீடுகள் வழங்கப்படும்.

12 இலட்சம் ரூபாய் இழப்பீடு: இதற்காக மீனவர் ஆண்டுக்கு 1,920 ரூபாய் செலுத்த வேண்டும்.15 இலட்சம் ரூபாய் இழப்பீடு: இதற்காக ஆண்டு சந்தாவாக 2,550 ரூபாய் செலுத்தப்பட வேண்டும்.20 இலட்சம் ரூபாய் இழப்பீடு: அதிகபட்ச இழப்பீடான 20 இலட்சத்தைப் பெறுவதற்கு, ஆண்டுக்கு 3,600 ரூபாய் செலுத்த வேண்டும்.

இதேவேளை உயிரிழப்புகளுக்கு மட்டுமன்றி, தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் ஏனைய சவால்களுக்கும் இத்திட்டம் உதவியாக அமையும் என சபை தெரிவித்துள்ளது: