2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இன்று நாடு முழுவதும் GIT பரீட்சை ஆரம்பம்

உள்ளூர்January 11, 2026 · 7 months முன்2
இன்று நாடு முழுவதும் GIT பரீட்சை ஆரம்பம்

க.பொ.த உயர்தர 12-ஆம் தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை இன்று நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த GIT பரீட்சையானது 1,665 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், இதற்காக ஒரு இலட்சத்து தொண்ணூற்று எண்ணாயிரத்து முன்னூற்று மூன்று (198,303) மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, நிலவிய அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய 10 பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

நாடளாவிய ரீதியில் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான தேர்வுகள் வரும் 20-ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.