2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மகாவலி கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உள்ளூர்August 5, 2026 · 1 week முன்2
மகாவலி கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக, மகாவலி கங்ககைக்கு உட்பட்ட உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கங்க இஹல கோரள, கங்கவட கோரள மற்றும் ஹாரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே முக்கியமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இடர்முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் இது குறித்து மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.