2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்த “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் ஆரம்பம்!

உள்ளூர்April 24, 2026 · 4 months முன்1
மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்த “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு முகாமைத்துவத் திட்டம் நேற்று வியாழக்கிழமை (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தியின் தலைமையில் கேகாலை வித்தியாலயத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்த “EduCycle” திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக மீள்சுழற்சி செய்வதன் மூலம் பசுமையான எதிர்காலத்திற்கு அடித்தளம் இடுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை வசதிகளை வழங்குவதற்காக சுற்றாடல் அமைச்சுக்கும் நெப்டியூன் பேப்பர்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.

தற்போதைய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் பொறுப்புடன் செயற்படுவது எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமான காரணியாகும் என  இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களாக, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

பாடசாலைகளில் PET பிளாஸ்டிக் சேகரிப்பு நிலையங்களை நிறுவி, நடைமுறை ரீதியான மீள்சுழற்சி முறைகளை ஊக்குவித்தல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பான நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரித்தல்.

கல்வி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் தனியார் துறையினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்பன உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சமந்த ரணசிங்க, சாகரிகா அத்தவுட, சுற்றாடல் அமைச்சின் ஆலோசகர் ரவீந்திர காரியவசம், நெப்டியூன் பேப்பர்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் கேகாலை வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.