2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

6ஆம் தரத்திற்கு கல்வி மறுசீரமைப்பு ஜனவரியில் : அமைச்சர் ஹரிணி அமரசூரிய

உள்ளூர்May 5, 2026 · 3 months முன்2
6ஆம் தரத்திற்கு கல்வி மறுசீரமைப்பு ஜனவரியில் :  அமைச்சர் ஹரிணி அமரசூரிய

2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகக் கூறினார்.முன்னதாக அச்சிடப்பட்ட தொகுதிகளில் காணப்பட்ட சிக்கல்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்ட முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த மீளாய்வு செய்யப்பட்ட தொகுதிகள் இந்த மாதம் அச்சிட அனுப்பப்படும்.

புதிய மறுசீரமைப்புகளின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகும் என்றும், இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், இந்த மறுசீரமைப்பு குறித்த விளக்கமளிப்புகள் ஜூலை மாதம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார்.