2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது

உள்ளூர்January 16, 2026 · 7 months முன்3
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது

தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

அரச திணைக்களங்களில் உள்ள சில பலவீனமான அதிகாரிகள், இந்த கடத்தல்காரர்களுடன் கைகோர்த்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

ஆகையால், அச்செயற்பாடுகளில் இருந்து விலகுமாறு தான் மீண்டும் ஒருமுறை கோருவதாகவும், அவ்வாறு இல்லையெனில் கடமைகளில் இருந்து விலகுமாறு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரினார்.