2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

சீன நாட்டவர்களின் கடவுச்சீட்டு விவகாரத்தில் பரபரப்பு

உள்ளூர்May 28, 2026 · 3 months முன்2
சீன நாட்டவர்களின் கடவுச்சீட்டு விவகாரத்தில் பரபரப்பு


கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைப்பதற்காக தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கோரியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். 

இருதரப்பு சட்டத்தரணிகளினாலும் முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ்.போதரகம, சந்தேக நபரை வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.