கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி சூடு

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் மஹவத்த கடிகார தூணிற்கு அருகில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயத்திற்குள்ளான குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
களனி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




