விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

எல்ல – வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய பார்வையிட்டு, அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தங்காலை நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சடலங்களை பிரதமர் இன்று பார்வையிட்டதோடு, அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அத்தோடு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




