2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நிலக்கரி இறக்குமதி விவகாரம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிரடி விசாரணை ஆரம்பம்!

உள்ளூர்May 8, 2026 · 3 months முன்1
நிலக்கரி இறக்குமதி விவகாரம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிரடி விசாரணை ஆரம்பம்!

2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிலக்கரி இறக்குமதி தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணைக்குழு கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, சாஞ்சி ஆராச்சி வத்தை, நீதிமன்ற பியச, நீதவான் நீதிமன்ற வளாகத்தின் 5 ஆம் மாடியில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ உள்ள தகவல்களை மே மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.