2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மலையிலிருந்து விழுந்து கார் விபத்து

உள்ளூர்March 15, 2026 · 5 months முன்1
மலையிலிருந்து விழுந்து கார் விபத்து

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று, கடந்த 13ஆம் திகதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது காரைச் செலுத்திய சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்தியப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த சாரதி, ஒரு பெண் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போது சாரதி மாத்திரம் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.