2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

இலஞ்சம் கோரிய சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் கைது

உள்ளூர்December 12, 2025 · 8 months முன்1
இலஞ்சம் கோரிய சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் கைது

5000 ரூபாவை இலஞ்சமாகக் கோரிய குற்றச்சாட்டில்இ ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தனக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதுஇ ​​சரியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வருமான அனுமதிப்பத்திரம் இல்லாமை மற்றும் மதுபோதையில் இருந்தமை ஆகியவற்றை வெளிப்படுத்திஇ அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க குறித்த பொலிஸ் அதிகாரிகள் 5இ000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தியபெதும பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும்இ தியபெதும வாரச் சந்தைக்கு முன்புள்ள பிரதான வீதியில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.