Search

janani

Mar 24, 2026

உள்ளூர்

சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை செய்யப்படுமா ?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது அல்லது அதிலிருந்து அவர்களைத் அந்நியப்படுத்துவது என்பது தற்போது ஒரு உலகளாவிய போக்காக மாறியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சில நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தை போல இலங்கையிலும் 16 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்காக சமூக ஊடக பயன்பாடு தடைசெய்யப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், சமூக ஊடகம் தொடர்பில் மட்டுமல்லாது விளையாட்டு கலாசாரம் ஒன்றை சிறுவர்கள் மற்றும் நாட்டின் பிரஜைகள் மத்தியில் வளர்த்தெடுப்பது அவசியமாகும்.

வெறும் வெற்றியாளர்களை மட்டும் உருவாக்குவது அல்ல, மாறாக நாடு முழுவதும் ஒரு முறையான விளையாட்டு கலாசாரத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாகும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All