Search

admin

Jun 11, 2026

உலகம்

எல்லை மீறும் கப்பல்கள் இலக்காகும் என எச்சரிக்கை

எண்ணெய் தாங்கிகள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானின் உச்ச கூட்டு இராணுவக் கட்டளையகம் உத்தரவிட்டுள்ளதாக ஈரானின் 'மெஹ்ர்' (Mehr) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த எல்லையைக் கடக்க முயலும் எந்தவொரு கலனும் உத்தியோகபூர்வமாக இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.

அதேநேரம், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் படைகளுக்கும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையின் கடற்படைப் பிரிவுகளுக்கும் இடையே தீவிர மோதல்களும் இருதரப்புத் துப்பாக்கிப் பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாக மெஹ்ர் செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் ஈரானின் 7 கடலோரப் புள்ளிகளை இலக்கு வைத்து இதுவரை தாக்குதல்களை நடத்தியுள்ளன.

குறிப்பாக பண்டார் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik), கெஷ்ம் (Qeshm) மற்றும் ஹெங்காம் தீவு (Hengam Island) ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All