Search

admin

Jun 10, 2026

உலகம்

அமெரிக்கா–ஈரான் மோதல் புதிய கட்டத்தை எட்டியது

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் ‘அப்பாச்சி’ (Apache) உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு படைகள் தற்காப்புத் தாக்குதல்களை தொடங்கியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) இந்தத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து CENTCOM தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஈரான் மீது தற்காப்புத் தாக்குதல்களை (Self-defense strikes) எமது படைகள் தொடங்கியுள்ளன.

ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு நிகரான மற்றும் பொருத்தமான பதிலடியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது." என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All