
puja
Jul 28, 2026
உள்ளூர்
டெண்டர் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.20 இலட்சம் இலஞ்சம்... இருவர் சிக்கினர்!

2,000,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வர்த்தகர் ஒருவரும் மற்றொரு நபரும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராதனை போதனா வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டிற்கான சமையலறை உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான விலை மனுக் கோரல் அழைக்கப்பட்ட போது, முறைப்பாட்டாளரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம் எனக் கூறி, அந்த டெண்டரைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருவதாகக் கூறி சந்தேகநபர் இலஞ்சம் கோரியுள்ளார்.
இதன்போது, முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமாவின் பெயரில் விலைகோரல் சமர்ப்பிப்பதற்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பதற்காக முதற்கட்டமாக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகக் கோரப்பட்டுள்ளது.
குறித்த தொகையானது 25 இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 20 இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அந்த 20 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ், கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மற்றொரு நபரும் நேற்று (27) கம்பளை தபால் அவலுவகத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





