Search

puja

Jul 27, 2026

உள்ளூர்

முன்னாள் அமைச்சரின் மகன் தொடர்பான வழக்கில் புதிய முன்னேற்றம்!

நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

சந்தேகநபர்களை இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளார். 

சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட குறித்த 5 சந்தேகநபர்களும் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All