
janani
Apr 2, 2026
உலகம்
ட்ரம்ப் ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை

ஈரான் ஒரு இணக்கப்பாட்டிற்கு முன்வராவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி உட்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அநேகமாக இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஈரானின் இராணுவக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த கட்டமாக அந்நாட்டின் மின்சார விநியோகத்தைக் குறிவைத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ட்ரம்ப் விடுத்துள்ள இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





