Search

Rebecca

Dec 2, 2025

உள்ளூர்

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு

திருகோணமலையில் நேற்றையதினம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

திருகோணமலை சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 59 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை சீன துறைமுக நகர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp