Search

Sep 25, 2025

உலகம்

இஸ்ரேல் மீது யேமன் தாக்குதல்.

இஸ்ரேலின் தெற்கு சுற்றுலா நகரமான எய்லாட்டை நேற்று (24) யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று தாக்கியதில் 22 போ் காயமடைந்தனா்.

செங்கடலையொட்டி அமைந்துள்ள எய்லாட் நகரில், யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் விழுந்ததையடுத்து வான்பாதுகாப்பு அமைப்பு இதைத் தடுக்கத் தவறியதோடு இரண்டாவது முறையாகவும் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த 22 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் 26 மற்றும் 60 வயது நபா்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் மையப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடத்தில் அந்த ட்ரோன் விழுந்ததால் அதிக சேதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All