Search

Sep 13, 2025

உலகம்

நேபாள பாராளுமன்றம் கலைப்பு.

நேபாள பாராளுமன்றம் நேற்று (12) இரவு கலைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாள போராட்டத்தால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதையடுத்து, நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர்நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் அவரது பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் நேற்று பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

மேலும், அடுத்த வருடம் மார்ச் 21ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp