Search

Oct 7, 2025

உலகம்

பிரித்தானியாவில் மசூதிக்கு தீ.

பிரித்தானியாவின் பிரைட்டன் அருகே உள்ள பீஸ்ஹெவன் மசூதியில், முகமூடி அணிந்த இருவர் தீவைத்தல் முயற்சி செய்துள்ளனர். மசூதிக்குள் நுழைய முடியாததால், படிக்கட்டுகளில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் மசூதி உள்ளே இருந்தவர்கள் தீப்பிழம்புகளைக் கண்டு உடனே வெளியேறியதால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய மற்றும் யூத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All