Search

SEGU

Nov 24, 2025

உலகம்

இந்தியாவில் பேருந்து விபத்து

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்தனர்.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பேருந்தும் தென்காசியில் இருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் இரண்டு பேருந்துகளும் முற்றிலும் சேதமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பேருந்து அஜாக்கிரதையாக இயக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த 28 பயணிகளும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆனால் அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் , உயிரிழப்பு நிலை உயர வாய்ப்புள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp