Search

SEGU

Oct 22, 2025

உலகம்

புடின் கைது செய்யப்படுவார்-எச்சரிக்கை

ஹங்கேரிக்கு செல்லும் வழியில், ரஷ்ய ஜனாதிபதி புடின் தங்கள் நாட்டு வான்வெளி வழியாக பறந்தால் கைது செய்யப்படுவார் என போலந்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ஹங்கேரியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்க இருக்கிறார். அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய பேச்சு நடத்த இருக்கின்றனர். இந்த சூழலில், ஹங்கேரியில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்காக தனது வான்வெளி வழியாக ரஷ்ய ஜாதிபதி புடின் பயணிக்க கூடாது என்று போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி கூறியதாவது: ஹங்கேரிக்கு செல்லும் வழியில் புடின் எமது வான்வெளியை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், சர்வதேச கைது பிடியாணையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர் கைது செய்யப்படுவார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp