SEGU
Sep 15, 2025
உள்ளூர்
நாட்டில் இன்றுமுதல் மறுமலர்ச்சி நகர திட்டம் ஆரம்பம்
மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று முதல் (15) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு இந்த திட்டத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
சமூகத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் சூழலை உருவாக்குவதும், எதிர்காலத் தொலைநோக்குப் பார்வையைப் பாதுகாக்கும் நகரத்தை உருவாக்குவதும் இந்த வாரத்தின் நோக்கமாகும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"'மறுமலர்ச்சி நகரம்' என்ற முக்கிய கருப்பொருளுடன் உள்ளூராட்சி வாரத்தை நாங்கள் தொடங்குகிறோம் என்றார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All