Search

Aug 13, 2025

உலகம்

ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஸெலென்ஸ்கி !

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தத்திற்கு முன்னர் ரஷ்யாவும் உக்ரைனும் ஆக்கிரமித்த பகுதிகளை விடுவிக்க வேண்டும். என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை, உக்ரைன் ஜனாதிபதி வோலோதிமிர் ஸெலென்ஸ்கி நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலாஸ்காவில் ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்திற்காக டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்கும் படியான ரஷ்ய முன்மொழிவை உக்ரைன் நிராகரிப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All