Search

SEGU

Sep 14, 2025

உள்ளூர்

மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி 21 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள் வெளியேறும் பகுதியில், குறித்த நபர் அவருடைய காலுறையில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருக்கும் போதே கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All