Search

Oct 29, 2025

Breaking

#News Alert நாரஹேன்பிட குடியிருப்புத் தொகுதியில் தீ. #Video

கொழும்பு - நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேல் மாடிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் தீ விபத்து காரணமாக வெளியேறும் வாயில்கள் தடைப்பட்டுள்ளதால் 'ஸ்கைலிஃப்ட்' (Skylift) வாகனங்கள் இரண்டும் அவ்விடத்திற்கு அனுப்பி மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தினால் ஒரு வீடு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அந்த வீட்டில் சிக்கியிருந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All