Search

Rebecca

Nov 11, 2025

உலகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பில்லையென உறுதியாகியுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் நஷீம் ஷாவின் வீட்டின் வாயில் கதவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான நஷீம் ஷா ராவல்பிண்டியில் தங்கியுள்ளார். அத்துடன் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நஷீம் ஷாவின் கிரிக்கெட் தொடருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இன்றைய போட்டியில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp