Search

Rebecca

Nov 9, 2025

உள்ளூர்

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தை உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையான இராசமாணிக்கம் இராஜபுத்திரனின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு அஞ்சலிக்காக வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி அன்னாரது உடலுக்கு போர்க்கப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த 07.112025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்த அன்னாரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறைபதம் அடைந்த அன்னார் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான சி.மூ இராசமாணிக்கம் அவர்களின் புதல்வர் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம்( 09 ) பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp