Rebecca
Nov 26, 2025
Breaking
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இது செல்லுபடியாகும்.
அதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும்.
இதேவேளை, மேலும் 7 மாவட்டங்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








