Rebecca
Nov 28, 2025
Breaking
'டிட்வா' புயல் எச்சரிக்கை!
திட்வா சூறாவளி வடக்கு நோக்கி வடமேல் வழியாக பயணிக்கிறது. இலங்கைக்கு அண்மித்ததாக நிலைகொண்டுள்ள தித்வா சூறாவளி தற்போது திருகோணமலையிலிருந்து 30 கிலோமீற்றர் தூரத்தில் தென்மேற்கில் அட்சரேகை 8.4 மற்றும் தீர்க்கரேகை 81.0 க்கு அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தள்ளது.
குறித்த சூறாவளி வடமேல் நோக்கி வடக்கு பகுதிக்கு பயணிப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் வடக்குஇ வடமத்தியஇ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.
அத்துடன் காற்றானது மணித்தியாலத்திற்க 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசும். திருகோணமலை, பதுளை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறையிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பிலிருந்து 20 கி.மீ. தென்மேற்கில் நகர்ந்த 'திட்வா' புயல் தற்போது திருகோணமலையிலிருந்து 50 கி.மீ. தெற்கே மையம் கொண்டுள்ளது.
இது குறித்து இன்று (28) அதிகாலை 5.00 மணிக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், இந்த அமைப்பானது வடக்கு சாய்வாக வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








