Search

Nov 17, 2025

உள்ளூர்

காலி முகத்திடல் கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் பலி

கொழும்பு - காலி முகத்திடல் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த இரண்டு இளைஞர்களும் 'போர்ட் சிட்டி' வளாகத்தில் படகு உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் மஹரகம பகுதியில் பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All