Search

Oct 23, 2025

உள்ளூர்

மருத்துவமனை உதவியாளரிடம் தோட்டாக்கள் மீட்பு !

கொழும்பு தேசிய மருத்துவமனையின் உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஐந்து T-56 தோட்டாக்களும் மூன்று 9mm தோட்டாக்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதானை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய போதைப்பொருள் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மருத்துவமனை பழைய வெளிநோயாளர் பிரிவின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த அந்த உதவியாளரின் மோட்டார் சைக்கிளிலிருந்து தோட்டாக்களும் வெள்ளைப் பொடியும் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தோட்டாக்கள் நபர் மீதான தனிப்பட்ட விரோதத்தால் யாராவது வைத்து இருக்கலாமா? அல்லது அந்த நபரே கொண்டுவந்தாரா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp