Search

Rebecca

Sep 5, 2025

உலகம்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் நேற்று இரவு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஆறு நாட்களில் அங்கு ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் என்பதோடு, முதல் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 08:56 மணிக்கு ஏற்பட்ட அண்மைய நிலநடுக்கத்தால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் தங்குமிடங்களை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை.

ஆனால், காயமடைந்த 17 பேர் குனார் மாகாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All