
janani
May 9, 2026
உள்ளூர்
சுற்றுலாப் பயணிகளின் வருகை 9 இலட்சத்தைக் கடந்தது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 9 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் மே 6 வரை மொத்தமாக 904,855 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகளவில் வருகை தந்தவர்கள் இந்தியப் பிரஜைகள் ஆகும். அவர்களின் எண்ணிக்கை மட்டும் 200,796 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல், பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மே மாத ஆரம்பத்தில் மட்டும் (1 முதல் 6 வரை) 28,578 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என அதிகார சபை கூறுகிறது.
எனினும், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





