Search

admin

Jun 9, 2026

உலகம்

"2 வாரங்களில் முழு வெற்றி" – ட்ரம்ப் நம்பிக்கை

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

"நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அவர்கள் மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு வர விரும்புகிறார்கள். அவர்கள் எங்களுக்கு அனைத்தையும் வழங்கத் தயாராக இருக்கிறார்கள், தங்களுக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று கூறவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்," என்று ட்ரம்ப்  தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், "நாங்கள் அந்தப் போரில் வெற்றி பெற்று வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாங்கள் முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் போது, நீங்கள் உண்மையாகவே அதை வென்றிருப்பீர்கள். அது ஒரு முழுமையான வெற்றியாக இருக்கும், மேலும் அது மிக விரைவில் நடக்கும். அப்போது எண்ணெய் விலையும் வேகமாக வீழ்ச்சியடையும்," எனக் கூறியுள்ளார். 

இருப்பினும், ட்ரம்ப் இரண்டு வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்த முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஏப்ரல் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட ஈரானுடனான போர்நிறுத்தம், இரு தரப்பினருக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் வரை, ஆரம்பத்தில் இரண்டு வார காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறுவது போல் ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு அவ்வளவு ஆர்வமாக இருந்தால், அவர்கள் ஏன் இதுவரை அதற்கு உடன்படவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றின் போது கேள்வி எழுப்பியபோது ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: 

''ஏனெனில் அவர்கள் பலமானவர்கள். அவர்கள் பெருமைமிக்கவர்கள். அவர்கள் ஒருபோதும் செய்வார்கள் என்று நினைக்காத, ஆனால் இப்போது அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவர்களுக்கு வேறு வழியில்லை. அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும்." என்றார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All