Search

janani

Apr 25, 2026

உள்ளூர்

இன்று பிற்பகல் பல இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும்

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All