Search

janani

Jul 3, 2026

உள்ளூர்

விளக்கமறியலில் இருந்த ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளுக்காகவே இவர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த அவர்கள், இன்று வரையான காலப்பகுதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All