Search

janani

Mar 26, 2026

உள்ளூர்

லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் மூன்று சீனர்கள் கைது

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட, ரூ. 1,83,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற மூன்று சீன நாட்டினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் சீன நாட்டு ஓட்டுநர்கள் என தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் அதிகாலை 01.40 மணிக்கு, தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம் FD-140 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.அவர்கள் கொண்டு வந்திருந்த 9 பயணப் பைகளில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 1,20,200 சிகரெட்டுகள் அடங்கிய 601 அட்டைப் பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை நடத்திய கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், இந்த சிகரெட் இருப்பைப் பறிமுதல் செய்ததுடன், ஒவ்வொருவருக்கும் முறையே ரூ. 30,000 மற்றும் ரூ. 90,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All