Search

puja

Aug 7, 2026

உள்ளூர்

சிறைச்சாலை கலவரம்... பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையில் திடீர் கலவரம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு (06) நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்தி, நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட துறைகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.





Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All