
Rebecca
Feb 2, 2026
உள்ளூர்
ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூவர் கைது!

மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் கடந்த 31ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 17 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் 03 சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி, மன்னாரின் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் புவனேக நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று சோதனை செய்யப்பட்டது.
அதே நேரத்தில் சட்டவிரோத விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 17 கிலோகிராம் ஆமை இறைச்சி, 39 முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் 3 சந்தேகநபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






