Search

Rebecca

Dec 24, 2025

உள்ளூர்

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்பிடி படகு

தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல நாள் மீன்பிடி படகில் இருந்த மொத்தம் ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகில் 11 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்த (ஐஸ்) மற்றும் ஹெரொயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில் கப்பல் கந்தரவிலிருந்து புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மற்றும் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All