Search

janani

Mar 24, 2026

உள்ளூர்

போதுமான எரிபொருள் உள்ளது : அமைச்சர் நளிந்த

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இறக்குமதிகளின் அடிப்படையில், மே மாதம் வரை தடையின்றி எரிபொருளை வழங்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 134,000 மெட்ரிக் தொன் டீசல் கையிருப்பில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் முற்பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மூலம் மேலும் 124,000 மெட்ரிக் தொன் கிடைக்கவுள்ளது. இதன்படி, மே மாதம் இரண்டாம் வாரம் வரை போதுமான டீசல் கையிருப்பு உள்ளது.

தற்போது கையிருப்பிலும் வரவுள்ள கப்பல்களிலும் சேர்த்து 151,450 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் மேலதிகமாக 55,300 மெட்ரிக் தொன் வரவுள்ளது. இதன் மூலம் மே மாதம் மூன்றாவது வாரம் வரை பெட்ரோல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

சுப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் 95 ஆகியவையும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All