Search

admin

May 28, 2026

உலகம்

அமெரிக்கா - ஈரான் உறவில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல் பாணியிலான பேச்சுக்களுக்கு ஈரான் ஒருபோதும் "பின்னடையாது" என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது "சிவப்பு கோடுகளை" அதாவது மறுக்க முடியாத கொள்கை எல்லைகளை உறுதியாகப் பின்பற்றும் என்று குறிப்பிட்ட அசிசி, "யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவசம் வைத்திருத்தல், ஹோர்முஸ் நீரிணையின் மீதான அதிகாரம் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குதல்" ஆகியவை இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மூலோபாய முட்டுக்கட்டையிலிருந்து தப்பிப்பதற்கான வழியைத் தேடும் ட்ரம்ப், அச்சுறுத்தல்களை விடுப்பதற்கும் உடன்படிக்கைக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இடையில் மாறி மாறிச் செயல்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்றும் இப்ராஹிம் அசிசி குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All