Search

Rebecca

Dec 23, 2025

உள்ளூர்

சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்தல்!

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சுகாதாரப் பிரச்சினைகளால் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில், ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தை 2025/26 ஆம் ஆண்டிலும் தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோர்ப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

பயனாளிகள்: அரசுப் பாடசாலைகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் பயிலும் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் இதன் கீழ் நன்மைகளைப் பெறுவர்.

வருமான எல்லை அதிகரிப்பு: பெற்றோர் உயிரிழப்பின் போது வழங்கப்படும் நன்மைகளைப் பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான எல்லை 180,000/- ரூபாவிலிருந்து 240,000/- ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விசேட உபகரணங்களுக்கான கொடுப்பனவு: முதுகு எலும்பை நேர்த்தி செய்வதற்கான கருவி (Scoliosis Brace) மற்றும் செவிப்புலக் கருவி (Cochlea Equipment) ஆகியவற்றிற்கு 75,000/- ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.

நீண்டகால சிகிச்சைக்கான கொடுப்பனவு: தீவிர நோய் பிரிவின் கீழ் அடையாளம் காணப்பட்ட 07 நோய்களுக்காக நீண்டகால சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு 20,000/- ரூபா வரை அனுகூலங்கள் வழங்கப்படும்.

புதிதாக சேர்க்கப்பட்ட நோய்கள்: Pneumothorax, Encephalitis, Thalassemia, Hereditary spherocytosis மற்றும் Sickle cell anemia ஆகிய நோய்கள் தீவிர நோய் பிரிவின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்தக் காப்புறுதித் திட்டம் 2026.08.31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். இதற்கான விண்ணப்பங்களை 2025.09.01 ஆம் திகதி முதல் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எந்தவொரு பிராந்திய அலுவலகத்திலும் சமர்ப்பிக்க முடியும்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All