
sasi
Dec 28, 2025
உள்ளூர்
வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், அதற்கான தோட்டாக்கள் மற்றும் T-56 வகை 25 தோட்டாக்கள் உடன் ஒருவர் மினுவங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடையவராகவும், ஹீனடியன – மினுவங்கொட பகுதியைச் சேர்ந்தவராகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






