Search

sasi

Dec 25, 2025

உலகம்

கர்நாடகா பேருந்து தீ விபத்தில் பலர் பலி

கர்நாடகாவில் இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில் பயங்கரமான பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து கோகர்ணா நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-ல் எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி தீப்பிடித்து எரிந்தது.

லொறி மோதிய வேகத்தில் பேருந்தின் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதால், பேருந்து உடனடியாகத் தீப்பற்றியது. பேருந்து முழுவதும் தீ பரவியதால், பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

இந்த விபத்தில் சுமார் 17 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்து சித்ரதுர்கா மற்றும் துமகூரு மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர். சித்ரதுர்கா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை நடத்தி வருகிறது.

கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் நாளில் ஏற்பட்ட இந்த விபத்து மாநிலத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All