Search

Rebecca

Dec 7, 2025

உள்ளூர்

இலங்கை போக்குவரத்து சபையின் விசேட அறிவிப்பு

ரயில் சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே ரயில் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ரயில் சேவைகள் வழக்கமாக இயங்கும் பகுதிகளில் ரயில் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க முயற்சிப்பதாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இது தொடர்பாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கண்டியிலிருந்து கொழும்புக்கு வரும் ரயில் பயணிகளுக்காக நாளை காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரயில் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி அந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முடியும் என்று அதன் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp