Dec 23, 2025
உள்ளூர்
கிளிநொச்சியில் புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி பளை போலீஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று பரிதாபகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. காங்கேசன்ந்துயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன், முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மோதுண்டு உயிரிழந்தார்.
இவ்விபத்து நேரத்தின் போது, ரயில் வீதி காவலாளர் அப்பகுதியில் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மக்கள் கூறும் தகவலின் படி, குறித்த பகுதியில் இதுபோன்று சம்பவங்கள் இரண்டு முறை நிகழ்த்தப்பட்டுள்ளன.
இறந்தவர் இரத்தினராசா கிருஷ்ணமோகன், ஆணைப்பந்தி நல்லூர், யாழ்ப்பாணம், வயது 52, குடும்பஸ்தர். சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






